Home » » நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக்கட்ட ணம் செல்லும்

    நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக்கட்ட ணம் செல்லும்

    Written By Sadhikcdm on ஜனவரி 25, 2011 | AM 2:51

    தமிழகத்தில் தனியார் பள்ளி களுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக்கட்ட ணம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்தது.

    தமிழகத்தில் கல்வி தீவிரமாக வணிகமயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கில் முளைத்துள்ள தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் கொள்ளையை நடத்தி வருகின் றன. இதற்கு எதிராக இந்திய மாண வர் சங்கம் உட்பட மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இத்தகையப் போராட்டத்தில் எழுந்த நிர்ப்பந்தம் காரணமாக, தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டணக்கொள்ளையை கட்டுப்படுத்தும் நோக் கில் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக்குழு பள்ளிகளில் ஆய்வு செய்து கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தது.

    கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விகிதமே மிக அதிகமானது என்ற விமர்சனம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்தது. ஆனால் ஏற்கெனவே மிக அதிகமாக கட்டணக் கொள்ளை நடத்தி வரும் தனியார் பள்ளி நிர்வாகங்களோ, கோவிந்த ராஜன் குழு நிர்ணயித்த கட்டண விகிதத்தை ஏற்க மறுத்தன. இது தொடர்பாக கோவிந்த ராஜன் குழு விடம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் முறையிட்டன. எனினும், நடப்புக் கல்வியாண்டில், இக்குழு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என நீதிபதி கோவிந்தராஜன் அறிவித்தார். இதை எதிர்த்து தனியார் பள்ளிக் கூட்டமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பெற்றோர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விகிதத்தை அமலாக்க இடைக்கால தடை விதித்தது.

    தடை விதிக்கப்பட்ட உடனே, தனியார் பள்ளிகள் தங்கள் இஷ் டம்போல் வரைமுறையற்ற கட்டணக்கொள்ளையை உடனடியாக தீவிரப்படுத்தின. இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கமும் பெற்றோர்களும் தன்னெழுச்சியாக கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராடி வந்தனர். நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் தமிழக அரசு அதை அலட்சியப்படுத்திய நிலையில், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த மேல்முறையீட்டு மனு செவ்வாயன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், பி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக்கட்டணம் செல்லும் என்று அறிவித்தனர். தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * தமிழகம் முழுவதுமுள்ள 6 ஆயிரத்து 400 தனியார் கல்வி நிறுவனங்கள், கோவிந்தராஜன் குழு கட்டண விகிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர்களது எதிர்ப்பினை நீதிமன்றம் தள்ளு படி செய்கிறது.

    * இந்த அனைத்துகல்வி நிறுவ னங்களும் 2010 ஜூன் மாதத்தில் துவங்கிய கல்வியாண்டில் வசூ லித்த கட்டணத்தைத்தவிர கூடுதலாக எந்த கட்டணமும் வசூலிக் கக்கூடாது. அதாவது இந்தக்கட்டணமும் 2009-10ஆம் கல்வி யாண்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவே இருக்க வேண்டும். 2010 மே 7ஆம் தேதியிட்ட கோவிந்தராஜன் குழுவின் உத்தரவில் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை மாணவர்களின் டெபாசிட் தொகையாக வைத்திருக்கப்படவேண்டும்; இந்ததொகை குறித்து கட்டண நிர்ணயக்குழு எடுக்கும் இறுதிமுடிவுக்கு கல்வி நிறுவனங்கள் கட்டுப் படவேண்டும்.

    * மேற்கண்ட 6 ஆயிரத்து 400 கல்வி நிறுவனங்களால், இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட்டிருந்தால் அந்தத்தொகையும் டெபாசிட் தொகையாக வைக்கப்பட வேண் டும். இதுகுறித்தும் கட்டண நிர்ணயக்குழு மேற்கொள்ளும் இறுதி முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.

    * கட்டண நிர்ணயக்குழுவின் உத்தரவை ஏற்றுக்கொண்ட 4 ஆயிரத்து 534 கல்வி நிறுவனங்கள், இக்குழுவின் உத்தரவில் அனுமதிக்கப்பட்டுள்ள அளவைவிடக் கூடுதலாக எந்தத்தொகையும் வசூலிக்கக்கூடாது.

    * எதிர்ப்பு தெரிவித்துள்ள கல்வி நிறுவனங்களின் கருத்துக்களை கட்டண நிர்ணயக்குழு தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்ளலாம். கட்டண நிர்ணயக் குழு, தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    * 6 ஆயிரத்து 400 கல்வி நிறு வனங்களும் தங்களது கருத்துக் களை கமிட்டியிடம் தெரிவிக்க அனுமதிக்கப்படுகிறது.

    * எந்த ஒரு கல்விநிறுவனமும் எந்தப் பெற்றோரிடமிருந்தும் எந்தவிதமான கூடுதல் கட்டண மும் வசூலிக்க அனுமதி இல்லை.

    இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .